ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

பஞ்சாப் தேர்தல்: பாஜக கூட்டணி கட்சிகள் எவ்வளவு தொகுதிகளில் போட்டி?

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவுகளை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.

பாஜக தேசியத் தலைவர் நட்டா

Published On :1 பிப்ரவரி 2024, 1:43 pm IST

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவுகளை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.

இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.

இதில், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி ஆரம்பித்த பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியானது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.பி.நட்டா கூறியதாவது:

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 65 தொகுதிகள், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகள், சிரோமணி அகாலி தளம்(சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடவுள்ளன.

பஞ்சாப் மீது சிறப்பு கவனம் தேவை. பஞ்சாபில் பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.