
உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மியின் ஷாக் அடிக்கும் தேர்தல் அறிக்கை
லக்னௌ: உத்தரப்பிரதேச தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை, உத்தரப் பிரதேச மாநில மக்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்னத்தான் சொல்லப்பட்டிருக்கிறது ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில்?
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
வாங்க பார்க்கலாம்..
- ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், உத்தரப்பிரதேசத்தில் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
- ஏற்கனவே நிலுவையிலிருக்கும் அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்.
- அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
- விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
- 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.
- வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.5,000 வழங்கப்படும்.
- பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.