48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பிரபல வாஸ்து ஜோதிடர் கத்தியால் குத்திக் கொலை!

கர்நாடகத்தில் பிரபல வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி, மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

News image

சந்திரசேகர் குருஜி (கோப்புப் படம்)

Updated On :5 ஜூலை 2022, 1:16 pm

கர்நாடகத்தில் பிரபல வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி, மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

பல்வேறு மாநிலங்களில் அவர் ரியல் எஸ்டேட் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்த பிரபல வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜி, ஹூப்ளி பகுதியிலுள்ள உன்கல் ஏரி அருகேவுள்ள விடுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஆசி பெறுவதைப்போன்று காத்திருந்த இருவர், வயிற்றுப் பகுதியிலும், கழுத்திலும் பலமுறை குத்தி கொலை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர் ஜோதிடர் சந்திரசேகர் குருஜி. அவர் கன்னட தொலைக்காட்சியில் வாஸ்து தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பலரால் அறியப்பட்டவர். மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தை வாங்கி விற்பனை செய்து வரும் ரியல் எஸ்டேட் பணியையும் அவர் செய்துவந்துள்ளார். 

இந்நிலையில், சந்திரசேகர் குருஜியிடம் ஆசி பெறுவதைப்போன்று சென்ற மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனை நேரில் கண்ட சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

குருஜியை சரமாறியாக குத்திய மர்ம நபர்கள் தப்பித்துச்சென்றதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் விடுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விஜயா நகர் காவல் துறையினர் தெரிவித்த தகவலின்படி, குருஜி கடந்த மூன்று நாள்களாகவே விடுதியில் தங்கிவந்துள்ளார். புதன்கிழமை விடுதியை அவர் காலி செய்வதாக விடுதி குறிப்பில் உள்ளது. மும்பையிலிருந்து திரும்பிய குருஜி ஜூலை 2ஆம் தேதி முதல் விடுதியில் தங்கியுள்ளார். 

குருஜி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதி முழுவதும் சீல் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருஜி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.