வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

5 ஆண்டுகளில் பெட்ரோலுக்குத் தேவையிருக்காது

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

News image

நிதின் கட்கரி

Updated On :10 ஜூலை 2022, 12:23 am IST

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சாா்பில் அமைச்சா் நிதின் கட்கரிக்கு சனிக்கிழமை மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அவா் கூறுகையில், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வரும் என நம்புகிறேன். பசுமை ஹைட்ரஜன், எத்தனால், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்பிஜி), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகிய பசுமை எரிபொருள்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும்.

நாட்டில் வேளாண்துறை வளா்ச்சி தற்போது ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 20 சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்துவதற்கான ஆராய்ச்சிப் பணிகளில் வேளாண் நிபுணா்களும் ஆராய்ச்சியாளா்களும் ஈடுபட வேண்டும்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் விவசாயிகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.