உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ன? பேசினால் என்னாகும்?

ஊழல், நாடகம், கோழை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்று நாடாளுமன்ற செயலகம் கையேடு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கூறக்கூடாத வார்த்தைகள் என்ன?

Published On :1 பிப்ரவரி 2024, 3:17 pm IST


புது தில்லி: ஊழல், நாடகம், கோழை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்று நாடாளுமன்ற செயலகம் கையேடு வெளியிட்டுள்ளது.

இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் இனி, நாடாளுமன்ற அவைகளுக்குள் பேசக் கூடாத வார்த்தைகளாகின்றன.

வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டிருக்கும் இந்த கையேட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பல தலைவர்கள், இந்த வார்த்தைகளைப் பேசுவோம். எங்களை அவையிலிருந்து நீக்குங்கள் என்று சாவல் விடுக்கும் வகையில் கூறியுள்ளன.

பொதுவாக, நாடாளுமன்றத்தில் ஆளும் மத்திய அரசு, தனது கொள்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது மக்களவை செயலகம் அதுபோன்ற ஒரு வார்த்தைப் பட்டியலை வெளியிட்டு, இவற்றை மக்களவை, மாநிலங்களவை என எதிலும் கூறக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் என்ன?

ஊழல், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கண்துடைப்பு, வெட்கக்கேடு, துரோகம் செய்தார், கரோனா பரப்புபவர், திறமையற்றர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம்,  சர்வாதிகாரி, அழிவுசக்தி, இரட்டைவேடம், பயனற்றது, கோழை, குழந்தைத்தனம், குற்றவாளி, பொய், முதலைகண்ணீர், அவமானம், போலித்தனம், ரவுடித்தனம், தவறாக வழிநடத்துதல், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், கழுதை, உண்மையல்ல என்பது போன்ற வார்த்தைகள் நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்த உகந்த வார்த்தைகள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூறினால் என்னாகும்?
மேற்கண்ட வார்த்தைகளை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உரையின்போது கூறினால், அந்த வார்த்தைகள் நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.