தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

தில்லியில் பள்ளி பேருந்தில் தீ விபத்து: 21 குழந்தைகள் உயிர் தப்பினர்

தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோப்பிலிருந்து..

Published On :1 பிப்ரவரி 2024, 3:21 pm IST


 
தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோகிணியின் செக்டர் 7-இல் உள்ள சாய்பாபா கோயிலின் அருகே மதியம் 2.15 மணியளவில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 

சம்வ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரார்கள் பால் பாரதி பப்ளிக் பள்ளியின் பேருந்து மற்றும் அடுத்தடுத்து மூன்று கார்களில் தீ பிடித்து எரிவதைக் கண்டு உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் பத்திரமாக உயிர் தப்பினர் என்று தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார். 

மதியம் 2.50 மணியளவில் தீ அணைக்கப்பட்டது, இந்த சம்பவத்தில் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.