சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
முன்னதாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமலாக்கத்துறையில் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.