தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.2,219-ஆக குறைப்பு

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:55 pm IST

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது. இதுதொடா்பாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:

ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் உபயோகிக்கப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் ரூ.2,354-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் விலை ரூ.2,219-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலையும் ஒரு கிலோலிட்டருக்கு ரூ.1,563.97 குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை குறைக்கப்பட்டபோதிலும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.1,003-ஆக நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனையானது.

விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.1.25 லட்சமாகக் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.