புதுதில்லி: கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, புதுதில்லியில் கரோனா கட்டுக்குள் இருந்தாலும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.