அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகார் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 20 மாவட்டங்களில் இணைச் சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 17 முதல் 12 மாவட்டங்களில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மேலும் எட்டு மாவட்டங்களை சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பிகாரில் வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்று உள்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கைமூர், போஜ்பூர், ஔரங்காபாத், ரோஹ்தாஸ், பக்சர், நவாடா, மேற்கு சம்பரன், சமஸ்திபூர், லக்கிசராய், பெகுசராய், வைஷாலி, சரண், முசாபர்பூர், மோதிஹாரி, தர்பங்கா, கயா, மதுபானி, ஜஹானாபாத், ககாரியா மற்றும் ஷேக்புரா ஆகிய இடங்களில் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன. இருப்பினும், இந்த மாவட்டங்களின் வாடிக்கையாளர்கள் தொலைபேசி வசதியை பெறுகின்றனர்.
இதற்கிடையில், பிகார் அரசு 11 மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்களின் பாதுகாப்புகளைப் பலப்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மாநில பாஜக தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

ராம்லீலா மைதானத்தில் உணவுத் திருவிழா: டிசம்பரில் நடத்த அரசு திட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி
இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம்: பேரவை உரை குறித்து ஆளுநா் ஆா்லேகா் கருத்து
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



