சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
மேலும் அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில்,
சர்வதேச மகளிர் தினத்தில், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேற்கு வங்க பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியளித்ததாகவும், சமூகத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்துகிறீர்கள். உங்கள் பங்களிப்பு இல்லாமல், சமூகம் இப்போது இருக்கும் நிலைக்கு முன்னேறியிருக்காது.
உலகத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றுமாறு அனைவரையும் அவர் வலியுறுத்தினார்.