மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உ.பி.தேர்தல் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம்: மாயாவதி

உத்தரப் பிரதேச தேர்தல்  தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

News image
மாயாவதி
Updated On :11 மார்ச் 2022, 12:30 pm

DIN

உத்தரப் பிரதேச தேர்தல்  தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என்றும் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ‘2017-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் பாஜக எந்த நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமைக்கு தற்போது காங்கிரஸ் தள்ளப்பட்டுவிட்டது. பகுஜன் சமாஜ் பாஜகவின் ‘பி டீம்’ எனப் பொய் பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்’ எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.