கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காங்கிரஸ் தலைவர் யார்?: 2.30 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 2.30 மணி நேரம் நடைபெற்றது.

News image
Updated On :13 மார்ச் 2022, 2:27 pm

DIN

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தில்லியில் முதல்முறையாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 2.30 மணி நேரம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது, 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மாலை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது. 5 மாநிலத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

எனினும், காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி  பொறுப்பேற்றுக்கொள்வது குறித்தும், காங்கிரஸ் கட்சியில் முழுமையாக சீர்திருத்தங்கள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 2.30 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் விவாதிக்கப்பட்ட முழு விவரங்களை அறிக்கை வாயிலாக காங்கிரஸ் கட்சி வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.