விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூடிய மாநிலங்களவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வை கண்டித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.