தில்லி மாநகராட்சி திருத்த மசோதா 2022-க்கு மத்திய அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தில்லி மாநகராட்சியை ஒன்றிணைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அடுத்த வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.