கரோனாவுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிவரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடைய உணவு தேவைப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நடைபெற்று வருகின்றன. இன்று பகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
இதையும் படிக்க | இந்தியாவில் மட்டுமே 15% பெண் விமானிகள்: மற்ற நாடுகளில் வெறும் 5%
அவர் பேசியதாவது:
தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மதிய உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், குழந்தைகளுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்கு மாற்றாக எதுவும் வழங்கவில்லை. குழந்தைகளின் பெற்றோர்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதுபோன்ற நெருக்கடியை சந்தித்ததில்லை.
தற்போது குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துடைய உணவுகள் தேவைப்படுகிறது” என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்

தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியமில்லை: குஷ்பு சவால்

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

