அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை பதவியேற்பு: பிரதமர் பங்கேற்பு

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை (திங்கள்கிழமை) இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2022, 12:56 pm IST


கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை (திங்கள்கிழமை) இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழா காலை 11 மணியளவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.

பதவியேற்பு விழாவில் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள் என்பது குறித்த தகவலை பாஜக இன்னும் வெளியிடவில்லை.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் பிரமோத் சாவந்தைத் தொடர்புகொண்டது. அப்போது, "எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றி உங்களுக்கு நாளை தெரியவரும்" என்றார் அவர்.

முதல்வரைத் தவிர்த்து கோவா அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் இடம்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.