மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எச்சரிக்கை! குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா: ஆய்வு

கரோனா தொற்று குழந்தைகளிடையே ஆஸ்துமா, நுமோனியா, மூச்சு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா
Updated On :4 மே 2022, 10:59 am

DIN


கரோனா தொற்று குழந்தைகளிடையே ஆஸ்துமா, நுமோனியா, மூச்சு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளதா?, எனில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஏனெனில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னைகளை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வாமை மற்றும் மருத்துவ நோய் எதிர்ப்பு இதழில் இந்த ஆய்வு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்துமா பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளை அணுகியுள்ளதாகவும், சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவசரகால இன்ஹேலர்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
 
கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஆஸ்துமா பிரச்னைகளுக்காக மருத்துவமனை வருவது அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகள் அதே இடைவெளியுள்ள ஆறு மாதங்களில் ஆஸ்துமாவில் முன்னேற்றமடைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவரும், குழந்தைகள் நல மருத்துவருமான கிறிஸ்டியன் செளவ் இது குறித்து பேசும்போது, கரோனா முதல் அலையின்போது அமெரிக்காவில் 62 ஆயிரம் குழந்தைகளுக்கு பிசிஆர் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7,700 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

வீட்டிலேயே இருத்தல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் முதல் அலையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளும் ஒத்துழைத்ததால் ஆஸ்துமா பெரிதாக தீவிரமடையவில்லை.

ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று குணமடைந்த பிறகு ஆஸ்துமா பிரச்னைகள் தீவிரமடைவது கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் முதல்நிலையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எச்சரித்துள்ளது. கரோனாவுக்கு பிறகு ஆஸ்துமா பிரச்னைகள் தீவிரமடையும், நுமோனியா மற்றும் மூச்சு சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது என்று கிறிஸ்டியன் செளவ் குறிப்பிட்டார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.