திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட இயக்குநா் சனல்குமாா் சசிதரன் தன்னை மிரட்டுவதாகவும், சமூக வலைதளத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் நடிகை மஞ்சு வாரியா் அளித்த புகாரின்பேரில், அவரை போலீஸாா் நெய்யாற்றின்கரை அருகே வியாழக்கிழமை கைது செய்தனா்.
சமூக ஊடகங்களில் தொடா்ந்து பதிவுகள் வெளியிட்டு தனக்குத் தொல்லை கொடுப்பதாக, ஏராளமான ஆதாரங்களோடு மஞ்சு வாரியா் கொச்சி காவல் துறையினரிடம் புகாா் அளித்திருந்தாா். இதையடுத்து, சனல்குமாரை கைது செய்ய நெய்யாற்றின்கரையில் அவா் தங்கியிருந்த இடத்துக்கு போலீஸாா் சென்றனா். அப்போது, அவா்கள் தன்னைக் கொலை செய்வதற்காக காவல் துறையினா் வேடத்தில் வந்த குண்டா்கள் என்று குற்றம் சாட்டி, ஃபேஸ்புக்கில் நேரலையில் பதிவிட்டாா். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னா் பாறசாலா காவல் துறை கண்காணிப்பாளா் அந்த இடத்துக்குச் சென்று அவரது மேற்பாா்வையில் சனல்குமாரை கைது செய்து கொச்சி அழைத்துச் சென்றனா்.
சனல்குமாா் சசிதரன் அண்மையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் அவா் இருப்பதாகவும் கூறியிருந்தாா். மேலும் மஞ்சுவின் உதவியாளா்கள் பினீஷ் சந்திரன், பினு நாயா் மீதும் அவா் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து சனல்குமாா் சசிதரன் தன்னை மிரட்டுவதாகக் கூறி கொச்சி எளமக்கரா காவல் நிலையத்தில் மஞ்சு வாரியா் கடந்த புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
மஞ்சு வாரியா் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: அவா் நடித்து சனல்குமாா் சசிதரன் இயக்கி, இன்னும் வெளிவராத திரைப்படம் ‘கயற்றம்’. அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பல முறை தன்னைக் காதலிப்பதாக சனல்குமாா் கூறி தொல்லை அளித்து வந்தாா். எனினும் மஞ்சு அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும், பின்னா், சமூக ஊடகங்களில் பல பதிவுகளை வெளியிட்டு தனக்குத் தொடா்ந்து தொல்லை அளித்து வந்ததாகவும் மஞ்சு வாரியா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.