குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகின்றது. வருகின்ற தேர்தலில், குஜராத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த செயல் தலைவர் ஹார்திக் படேல், கடந்த வாரம் டிவிட்டர் சுயகுறிப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கினார்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தொடர்ந்து, இன்று காலை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க படேல் சமூகத்தினரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவரான ஹார்திக் படேல் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | 'அவ்விய நெஞ்சத்தான்..' திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்
கடந்த 2019ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்கள் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஹார்திக். தொடர்ந்து, காங்கிரஸில் இணைந்த அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.