27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி

காலை பறித்த விபத்தால் பாவம் அந்த 10 வயது சிறுமியின் தன்னம்பிக்கையை பறிக்க முடியவில்லை. அதனால்தான். தனது ஒற்றைக் காலில் குதித்தபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்.

News image

ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி

Updated On :26 மே 2022, 4:48 pm IST

காலை பறித்த விபத்தால் பாவம் அந்த 10 வயது சிறுமியின் தன்னம்பிக்கையை பறிக்க முடியவில்லை. அதனால்தான். தனது ஒற்றைக் காலில் குதித்தபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்.

பிகார் மாநிலம் ஜமூய் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சீமா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சீமா தனது ஒரு காலை இழந்துவிட்டார். பல்வேறு சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஒற்றைக் காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.

படிக்க வேண்டும்.. மற்ற குழந்தைகளைப் போல பள்ளியில் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூர்த்தி செய்ய, ஒரு கிலோ மீட்டர் தொலைவு, என்பது மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்ற திரையிசைப்பாடல்படி, அந்த ஒற்றைக் காலுடன் பள்ளிக்குப் புறப்படுகிறார் சீமா.

புத்தகப் பையை தனது தோளில் சுமந்து கொண்டு, ஒற்றைக் காலால் குதித்து குதித்து பள்ளிச் செல்கிறார். அவரைப் பார்க்கும் பலரும், அவருக்கு உதவ முன் வருகிறார்கள்.

இவரைப் பற்றிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சரியான வீடு இல்லாததால் வீடு கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஆரம்பத்தில் குதித்து குதித்து பள்ளிக்குச் செல்வது மிகுந்த கால்வலியை ஏற்படுத்தும். ஆனால் நாளடைவில் அதுவே பழகிவிட்டது என்கிறார் சிரித்தபடி சீமா.

மற்ற பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் உற்சாகத்துடன் பள்ளியில் பாடம் பயிலும் சீமா.. தன்னம்பிக்கையின் எல்லையாக விளங்குகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.