மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பலியானவர்கள் சமீர் அஹுஜா, அவரது மனைவி ஷாலு மற்றும் அவர்களது பணிப்பெண் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.