கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவரின் மகள் கடத்தல்!

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவரின் மகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவரின் மகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை பிரதாப் நகர் பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

காங்கிரஸ் தலைவர் கோபால் கேஷாவத் கூறுகையில், 

தனது மகள் அபிலாஷா தனது இருசக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்று திரும்பும்போது மர்ம நபர்களால் சிலர் தன்னைத் துரத்துகிறார்கள் என்றார். சில நேரத்திற்குப் பின்னர் அவரது செல்லிடபேசி அணைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், ஆனால் அவர்களில் யாருக்கும் இதுகுறித்து எந்த துப்பும் இல்லை என்றார். 

சில சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறையிடம் கொடுத்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேஷாவத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com