மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.
தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களைக் கடந்திருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேசத்திற்குள் நேற்று நுழைந்தது.
இதையும் படிக்க | தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது'
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் இன்று 78வது நாளாக மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்றைய நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பங்கேற்றார்.
மேலும், ம.பி.யில் அடுத்த 10 நாள்கள் 7 மாவட்டங்களில் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.