பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து சில பத்திரிகையாளர்களுக்கு ஆன்லைனில் மிரட்டல் வந்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தல் வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர் பத்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பல இடங்களில் தேடுதல் நடத்தப்படுகிறது என்று ஸ்ரீநகர் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
இதே வழக்கில் சில நாள்களுக்கு முன்பு இதேபோன்ற தேடுதல்களின் போது கிடைத்த தடயங்களைத் தொடர்ந்து தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும் 'காஷ்மீர் ஃபைட்' என்ற ஆன்லைன் பக்கம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர்கள் பணிபுரிவதாகக் குற்றம் சாட்டி அவர்களின் பட்டியலையும் வெளியிட்டது.
இதன்காரணமாக, குறைந்தது ஐந்து உள்ளூர் பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.