நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,968 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 34,598-ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,99,466 ஆக உள்ளது.
ஒரு நாளில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,716-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவின் கரோனா தொற்றின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23, 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது.
செப்டம்பர் 28-ல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும், அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியைத் தாண்டியது.
இதையும் படிக்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு
கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 ஆம் தேதி மூன்று கோடியை தாண்டியது. இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அன்று நான்கு கோடியைத் தாண்டியது.