விஜயதசமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புனிதமான வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த புனிதமான நாளில் அனைவரின் வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும் மற்றும் நேர்மறை ஆற்றலையும் அளிக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.