இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 
இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 38-ஆவது நாளாக, கா்நாடகத்தில் 15-ஆவது நாளாக சனிக்கிழமை பயணித்தது. இதனிடையே பல்லாரியில் இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். 

அதில், பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டை துண்டாடுவதாக ஆயிரக்கணக்கான மக்கள் கருதுவதால் இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ யாத்ரா என்று பெயரிட்டோம். இன்று இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பிரதமர் கூறியிருந்தார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக, கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். கர்நாடகத்தில் பாஜக அரசு எஸ்சி மற்றும் எஸ்டிக்கு எதிரானது இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com