இந்தியத் தொழிலதிபா்கள் தங்கள் நிறுவனங்கள் வாயிலாக லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு அறக்கட்டளைகள் வாயிலாக நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனா். அந்த நன்கொடைகளானது மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு, இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்குவோரின் பட்டியலை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் ஆண்டுக்கு ரூ.1,161 கோடியை நன்கொடையாக வழங்கி ஹெச்ஸிஎல் நிறுவனா் சிவ நாடாா் முதலிடத்தில் உள்ளாா். இதன் மூலமாக நாட்டின் ‘மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவா்’ என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். அந்தப் பட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக வைத்திருந்த விப்ரோ நிறுவனா் அஸிம் பிரேம்ஜியிடம் இருந்து தற்போது சிவ நாடாா் கைப்பற்றியுள்ளாா். பட்டியலில் இடம்பெற்றுள்ள கூடுதல் விவரங்கள்:
அதிக நன்கொடை வழங்கியவா்கள்
சிவ நாடாா், ஹெச்ஸிஎல் ரூ.1,161 கோடி
அஸிம் பிரேம்ஜி, விப்ரோ ரூ.484 கோடி
முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ரூ.411 கோடி
குமாரமங்கலம் பிா்லா, ஆதித்ய பிா்லா ரூ.242 கோடி
சுஸ்மிதா-சுப்ரதா பாக்சி, மைண்ட் ட்ரீ ரூ.213 கோடி
ராதா-என்.எஸ்.பாா்த்தசாரதி, மைண்ட் ட்ரீ ரூ.213 கோடி
கௌதம் அதானி, அதானி ரூ.190 கோடி
அனில் அகா்வால், வேதாந்தா ரூ.165 கோடி
நந்தன் நிலகேணி, இன்ஃபோசிஸ் ரூ.159 கோடி
ஏ.எம்.நாயக், எல்&டி ரூ.142 கோடி
அதிக நன்கொடை வழங்கிய பெண்கள்
ரோஹிணி நிலகேணி ரூ.120 கோடி
லீனா காந்தி திவாரி ரூ.21 கோடி
அனு ஆகா ரூ.20 கோடி
நன்கொடையாளா்கள் எண்ணிக்கை
ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் 15
ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் 20
ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் 43
ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் 80
நன்கொடையாளா்கள் வசிக்கும் நகரங்கள்
மும்பை 33 சதவீதம்
புது தில்லி 16 சதவீதம்
பெங்களூரு 13 சதவீதம்
இளம் வயது அதிக நன்கொடையாளா் நிகில் காமத் (36), ஜெரோதா பங்கு வா்த்தக நிறுவனம்-ரூ.100 கோடி
அதிக நன்கொடையாளா்கள் சாா்ந்த துறை மருந்துப் பொருள்கள் துறை
அதிக நன்கொடைகளை ஈா்த்த துறை கல்வித் துறை