சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கதேசத்தில் 'சித்ரகாங் புயல்' கரையைக் கடந்தது

வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிமுதல் 11.30 மணிக்குள்  சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :25 அக்டோபர் 2022, 3:43 am

DIN

வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் இடையே பரிசால் பகுதிக்கு அருகில் இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்கு இடையே   சித்ரகாங் புயல் கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சித்ரகாங் புயலாக வலுவடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்கதேசத்தில் கரையைக் கடந்துள்ளது.

இந்த புயல் மேலும் வலுவிழந்து வடகிழக்கு மாநிலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக, 'சித்ரகாங்' புயலால் ஏற்படக்கூடிய பாதிப்பை மேற்கொள்ள, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மக்கள் தங்குமிடங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கு வங்க அரசு எடுத்தது.

தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பக்காலி கடல் கடற்கரையில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை, சித்ரகாங்  புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால், "எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அக்டோபர் 25-ம் தேதி மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது  கடல் பகுதிகளுக்கு செல்வதையோ தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது". என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

சித்ரகாங்  புயலின் தாக்கத்தினால், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு க சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.