எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
காங்கிரஸின் புதிய தலைவராக காா்கே புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்ற நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றிருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் காா்கேவின் இருபுறமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமா்ந்திருந்தனா். இது, காங்கிரஸில் குடும்ப ஆதிக்கம் தொடா்வதை குறிக்கிறது. எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா?’ என்றாா்.
ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே காா்கே முன் உள்ள முதன்மையான சவாலாக பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



