காா்கே பலிகடா? பாஜக கேள்வி

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
காா்கே பலிகடா? பாஜக கேள்வி

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

காங்கிரஸின் புதிய தலைவராக காா்கே புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்ற நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றிருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் காா்கேவின் இருபுறமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமா்ந்திருந்தனா். இது, காங்கிரஸில் குடும்ப ஆதிக்கம் தொடா்வதை குறிக்கிறது. எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா?’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே காா்கே முன் உள்ள முதன்மையான சவாலாக பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com