பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

காா்கே பலிகடா? பாஜக கேள்வி

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:10 pm IST

எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

காங்கிரஸின் புதிய தலைவராக காா்கே புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்ற நிலையில், தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றிருப்பது அக்கட்சியின் உள்விவகாரம். பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் காா்கேவின் இருபுறமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமா்ந்திருந்தனா். இது, காங்கிரஸில் குடும்ப ஆதிக்கம் தொடா்வதை குறிக்கிறது. எதிா்வரும் குஜராத், ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தால், காா்கே பலிகடா ஆக்கப்படுவாரா?’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. குஜராத் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே காா்கே முன் உள்ள முதன்மையான சவாலாக பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.