பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஆடி வெள்ளி, வார விடுமுறை: கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி வெள்ளி மற்றும் வார விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 31) இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பேருந்துகள்! - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 11:14 pm IST

ஆடி வெள்ளி மற்றும் வார விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 31) இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை கோட்டம் சாா்பில், ஆடி வெள்ளி (ஜூலை 31) மற்றும் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆடிப் பெருக்கு தினமான திங்கள்கிழமை ஆகிய நாள்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து திருவண்ணாமலை, சென்னை, ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் கோயில், பேரூா் பட்டீசுவரா் கோயில், ஈஷா ஆதியோகி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.