டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தியுடன் சசி தரூர் திடீர் சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 11:42 am

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர் பதவிக்கான தேர்தல் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜி23 அதிருப்தி தலைவர்களில் சிலரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சசி தரூரின் இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.