ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்!

பிரபல இந்தி நகைச்சுவை நடிகரும், நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி தில்லி மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:53 pm IST

பிரபல இந்தி நகைச்சுவை நடிகரும், நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி தில்லி மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 58. ஆகஸ்ட் 10-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். 

பின்னர், சேர்க்கை சுவாசம் பொருத்தப்பட்ட அவர், சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து 40 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். 

இந்நிலையில், ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.20 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

1980-களில் தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்(2005) என்ற ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று இணையற்ற வெற்றி பெற்றார். 

ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களான மேனே பியார் கியா, பாஸிகர், பாம்பே டு கோவா மற்றும் ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா போன்றவற்றின் ரீமேக்காகவும் நடித்துள்ளார்.

உத்தரப் பிரதேச திரைப்பட மேம்பாட்டு குழுவின் தலைவராக இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.