ராஜஸ்தானின் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 29 பேர் காயம்!
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.


ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் அதிவேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் கெக்டி சதார் காவல் நிலையப் பகுதியில் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பேருந்து ஓட்டுநர் அதிவேகமாகச் சென்றதால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்கள் நிர்மா கரோல்(17) மற்றும் சேத்தன் ரேகர் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 4 பேர் அஜ்மீர் நகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் .
பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...