விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தானில் நிலச்சரிவு: 8 பேர் காயம், பலரைக் காணவில்லை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 7:23 am

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 3.50-க்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் மலைப்பகுதியில் இருந்து கற்கள் உருண்டு சாலைகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 60 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.