திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிம்லாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக சிம்லாவுக்கு வந்தடைந்தார். 

News image
திரெளபதி முர்மு
Updated On :18 ஏப்ரல் 2023, 9:39 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக சிம்லாவுக்கு வந்தடைந்தார். 

பராப்ராவில் உள்ள கல்யாணி ஹெலிபேடில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டமன்ற சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தேசிய தணிக்கை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுடன் உரையாட உள்ளார். மேலும் நாளை ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தில் 26வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். 

ஏப்.20ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. மேலும் இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தையும் அவர் பார்வையிடுகிறார். 

குடியரசுத் தலைவர் முர்முவின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.