தெற்கு தில்லியின் சந்தையில் தீ விபத்து!

தெற்கு தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
தெற்கு தில்லியின் சந்தையில் தீ விபத்து!
Updated on
1 min read

தெற்கு தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தெற்கு தில்லியின் சரோஜினி நகர் சந்தையில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 கடைகள் எரிந்து நாசமானது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக சரோஜினி நகர் மினி மார்க்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் ரந்தவா கூறினார்.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com