தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அத் தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தானகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 2019, நவம்பா் 19-ஆம் தேதி, கனிமொழியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.