கரோனா ஊரடங்கில் ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் ரூ.97 லட்சமும், வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு ரூ.3 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதனை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார். புது பங்களாவை கேஜரிவால் கட்டவில்லை என்றும், ஏற்கெனவே இருந்த பழைய பங்களாவையே புதுப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

கேஜரிவால் குடியிருந்த பழைய வீட்டை மாநகராட்சி வாழத் தகுதியற்றது என்று அறிவித்திருந்ததால், கேஜரிவால் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com