பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கரோனா ஊரடங்கில் ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

Updated On :26 ஏப்ரல் 2023, 6:12 pm IST

கரோனா ஊரடங்கில் தனது பங்களாவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ. 45 கோடி மதிப்பில் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் ரூ.97 லட்சமும், வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு ரூ.3 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதனை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா குறிப்பிட்டுள்ளார். புது பங்களாவை கேஜரிவால் கட்டவில்லை என்றும், ஏற்கெனவே இருந்த பழைய பங்களாவையே புதுப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

கேஜரிவால் குடியிருந்த பழைய வீட்டை மாநகராட்சி வாழத் தகுதியற்றது என்று அறிவித்திருந்ததால், கேஜரிவால் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.