கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான்-3

புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 7:44 pm

DIN

புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதிலுள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கிலோ மீட்டா் தூரமும், அதிகபட்சம் 1,27,609 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது அதற்கு அடுத்தபடியாக விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈா்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.1) நள்ளிரவு 12.05 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈா்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

‘சந்திரயான்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் தனது இறுதி பயணத்தை நிறைவு செய்தது. தற்போது நிலவை நோக்கி விண்கலம் பயணித்து வருகிறது. சரியான பாதையில், சீரான வேகத்தில் சந்திரயான் செல்கிறது. அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் ஆக. 5-ஆம் தேதி உந்தித் தள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னா் திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும்.

சந்திரயான்-3 விண்கலம் திட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான நிலவு சுற்றுப் பாதை மாற்றம் திட்டமிட்டபடி நிறைவு செய்யப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.