எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரந்திர ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மாலை 5.35 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ரயில் மதுரை வழியாக இயக்கப்படுவது கூடுதல் சிறப்பம்சம்.
மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்போது நிரந்தர வாராந்திர ரயில் மூலம் தெற்கு ரயில்வே அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் தென் மாவட்ட மக்களும் இனி வேளாங்கண்ணிக்கு நேரடியாக செல்லலாம்.
Summary
Southern Railway has announced that a weekly train will be operated from Ernakulam to Velankanni.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்
ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




