சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி: ராகுல் காந்தி

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 12:02 pm

DIN

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மை எப்போதும் வெல்லும், எனது பாதை தெளிவாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும், என் வேலை என்ன என்பதில் என் மனதில் தெளிவு இருக்கிறது. மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்க்தத்தில், 'எது வந்தாலும் என் கடமை அப்படியே தொடரும். இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்போம்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

மேலும் எதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மூலமாக ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் தொடர்வார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.