பாஜக எம்பிக்கு 2 ஆண்டுகள் சிறை: தகுதிநீக்கம் செய்யப்படுவாரா?

டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கிய வழக்கில் உத்தர பிரதேச பாஜக எம்.பி.ராம் சங்கர் கத்தேரியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  
படம்: நன்றி ஏஎன்ஐ
படம்: நன்றி ஏஎன்ஐ

டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கிய வழக்கில் உத்தர பிரதேச பாஜக எம்.பி.ராம் சங்கர் கத்தேரியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 2011ஆம் ஆண்டு டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கியதாக ராம் சங்கர் கத்தேரியா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில், ராம் சங்கர் கத்தேரியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.50,000/- அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் 6 ஆண்டுகள் என மொத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

இந்நிலையில், ராம் சங்கர் கத்தேரியாவும் எம்.பி. பதவியில் இருந்து விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை தற்போது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com