சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிலவை படம் பிடித்த சந்திரயான் 3(விடியோ)

நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பை முதல்முறையாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 5:54 am

DIN

நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பை முதல்முறையாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ரூ. 615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு அருகே கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதைத் தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

தொடா்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்திரயான் புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நிலவுக்கு அருகே விண்கலம் சனிக்கிழமை சென்றது. இதையடுத்து விண்கலம் நிலவின் வட்ட சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை தொலைவு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் குறைக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக நிலவின் மேற்பரப்பை நேற்றிரவு சந்திரயான் 3 படம்பிடித்து அனுப்பியுள்ளது.

அந்த காணொலியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, திட்டமிட்டபடி செயல்பட்டால் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.