எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உத்தரபிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

உத்தர பிரதேச மாநிலம் சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 6:10 am

DIN

உத்தர பிரதேச மாநிலம் சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னௌ நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் போக்குவரத்தும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. 

பிரதமர் நரேந்திர மோடியின் ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் மெய்நிகர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கல்வீச்சு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) துணைக் குழு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தது.

தகவலை சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர், அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து பாரபங்கியின் ரயில்வே போலீசார் அடையாளம் தெரியாத நபர்களிடம் விசாரணையை தொடங்கினர்.

கடந்த மாதம் அயோத்தியில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. 

வந்தே பாரத் ரயிலை கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி முதன் முதலில் தொடங்கி வைத்தாா். தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய பாஜக அரசின் முக்கிய ரயில்வே திட்டங்களில் ஒன்றாக வந்தே பாரத் முன்னிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாட்டின் சில இடங்களில் வந்தே பாரத் ரயிலைக் குறிவைத்து விஷமிகள் கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.