மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று(வியாழக்கிழமை) விவாதம் நடைபெற்றது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலுரை அளித்தார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க யாருமில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இதையும் படிக்க: மணிப்பூர் குறித்து பேசாத மோடி: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் மக்களவை நாளை(ஆக.11) காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.