ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

சுதந்திர நாளையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 6:45 am

DIN

சுதந்திர நாளையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். 

நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

அதுபோல மாநில முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Story image

அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளும் சுதந்திர நாளைக் கொண்டாடி வருகின்றன. 

இந்நிலையில் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.