சுதந்திர நாளையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
அதுபோல மாநில முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளும் சுதந்திர நாளைக் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக தில்லி போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.