ஒரேநாளில் இண்டிகோ நிறுவனத்தின் இரு விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் இரண்டாவது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகவும் எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று நேற்று மதுரையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த இரு விமானங்களின் தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக இண்டிகோ விமானம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரேநாளில் இரு இண்டிகோ விமானங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.