'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டம் தில்லியில் வரும் டிச. 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வரும் டிச. 6 ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சோ்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்: பாஜக 137, காங்கிரஸ் 54 இடங்களில் முன்னிலை!
தெலங்கானாவில் மத்திய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.